செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
📄
ஊரக வளர்ச்சித்துறை
PDF இல்லையெனில் "CPGRAMS மனு அடிப்படையில் நிர்வாக நடவடிக்கை" ↳ வருவாய்த்துறை
மேரி பஞ்சாயத்து செயலியில் தகவல்கள் புதுப்பிப்பு – மக்கள் இயக்கத்தின் கோரிக்கைக்கு நிர்வாக நடவடிக்கை மக்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில், கிராமப்புற உள்ளாட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் CPGRAMS தளத்தின் மூலம் முக்கியமான கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “மேரி பஞ்சாயத்து” (Meri Panchayat) செயலியில் ஊராட்சி செயலாளர்களின் விவரங்கள், செயல்பாட்டிலுள்ள அலைபேசி எண்கள், கிராம சபை தீர்மானங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பிற தகவல்கள் முழுமையாகவும், சரியான முறையிலும், உடனுக்குடன் பதிவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் , இ.ஆ.ப. அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சிகளில் தகவல்களை சரியாகவும், காலதாமதமின்றியும் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை, கிராமப்புற மக்களுக்கு தேவையான தகவல்களை எளிதில் பெறுவதற்கும், உள்ளாட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிப்பதற்கும் முக்கிய பங்களிப்பாக அமையும். மக்களின் கோரிக்கைக்கு விரைவாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் திரு. பி. பொன்னையா, இ.ஆ.ப. அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மக்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பதிவிட்டவர்: கா. ஐயப்பன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (தொழில்நுட்ப பிரிவு) மக்களுக்கான மக்கள் இயக்கம் இராமநாதபுரம் மாவட்டம்
📅 23 Jul 2026
💾 180.1 KB
AYAPPAN MMM-TN-2026-0218
← அனைத்து ஆவணங்களையும் பார்க்க
✅ இணைப்பு நகலெடுக்கப்பட்டது!