செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/xwy-dbpn-cho இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் --> இது தேர்தல் நேரம். ஒரே இடத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், மாண்புமிகு மக்கள் சார்பாக அரசியல் கட்சிகளின் முன்பாக நாம் எழுப்பும் கேள்விகளும் அவர்களது பதில்களும் விரைவில் நமது இனைய தளத்தில் நீங்கள் காணலாம்..   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 322     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 322
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு

மாண்புமிகு மக்கள் இயக்கம்

ஜனநாயக நாட்டில் “மாண்புமிகு” என்ற மரியாதையான பட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் பிரதிநிதிகளுக்கு நாம் வழங்குகிறோம் . ஆனால் ஜனநாயகத்தின் அடிப்படை உண்மையான அந்த மரியாதையின் நிரந்தர உரிமையாளர்கள் இந்திய குடியரசர்களாகிய நாம் ஒவ்வொருவரும் என்பதை இத்தளம் நினைவூட்டுகிறது.

அரசியல்வாதி ஒருவர் “மாண்புமிகு” என்று அழைக்கப்படுவது அவரது ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தில் மட்டும்.
ஆனால் ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்றென்றும் நிரந்தர மாண்புமிகு குடிமகனாகவே இருக்கிறார்.

இந்த உண்மையை சமூகத்தில் வலியுறுத்தி, குடிமக்களை விழிப்புணர்வுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்படச் செய்யும் ஒரு பொதுநல இயக்கமே “மாண்புமிகு மக்கள் இயக்கம்.”

இந்த இயக்கம், குடிமக்கள் தங்கள் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் கடமைகளை புரிந்து கொண்டு, ஆட்சியில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் நல்லாட்சியை உறுதிசெய்ய தேசம் முழுவதும் உள்ள பொறுப்புள்ள குடிமக்களை ஒருங்கிணைத்து செயல்பட முயல்கிறது..

மக்கள் தேர்தலில் வாக்களிக்கும் போது பணம், பரிசு அல்லது எந்தவித லஞ்சத்தையும் பெறாமல் சுயநினைவுடன் வாக்களிப்பது, அரசு நிர்வாகத்தை தொடர்ந்து கண்காணிப்பது, தேவையான போது குறைகளைவு மனுக்கள் , தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) போன்ற சட்ட கருவிகளை இன்றைய சூழலுக்கு தகுந்தாற்போல் இணையம் (Internet) வழியாக சமர்ப்பித்து நிவாரணம் தேடுவது போன்ற செயல்கள் ஒரு உண்மையான மாண்புமிகு குடிமகனின் அடையாளங்களாகும்.

இயக்கத்தின் நோக்கங்கள்:

இந்த இயக்கம் எந்த அரசியல் கட்சியையும் சாராமல் ஒரு பொதுநல நல இயக்கமாக செயல்பட முனைகிறது. இதன் ஒரே நோக்கம் விழிப்புணர்வு பெற்ற , பொறுப்புள்ள மற்றும் துணிச்சலான சட்டத்தை மதிக்கும் மாண்புமிகு குடிமக்களை உருவாக்கி உண்மையான மக்களாட்சியை காண விரும்புகிறது.

மக்கள் விழித்தால் தான் ஜனநாயகம் வலுவாகும்.
மக்கள் துணிந்தால் தான் நல்லாட்சி உருவாகும்.

எனவே, “நாம் எல்லோரும் மாண்புமிகு மக்கள்” என்ற உணர்வுடன், உண்மையான மக்களாட்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி ஒன்றிணைந்து செயல்படுவோம். இதன் மூலம் நமது தேசத்தந்தை மகாத்மா, மக்கள் ஜனாதிபதி கலாம், புரட்சி கவிஞன் பாரதி போன்றோர் கண்ட ஒரு லட்சிய சமுதாயத்தை கட்டமைப்பதில் நாமும் பங்குபெறுவோம்.

இந்த அமைப்பு தன்னார்வலர்களை மட்டுமே கொண்டு செயல்பட்டுவருகிறது. பல்வேறு தளங்களில் உள்ள ஆளுமைகள், சமூக செயல்பாட்டாளர்கள் எந்த எதிர்பார்ப்புமின்றி இந்த அமைப்பிற்கு ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். இந்த அமைப்பில் எந்த ஒரு தனிநபரும் தனிப்பட்ட முறையில் தன்னை முன்னிறுத்த விரும்பவில்லை என்பது சிறப்பு. ஒருவரின் செயல்பாடு மட்டுமே ஒருவரை அடையாளப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் பங்கேற்பாளர்களாக ஒன்றிணைந்து பயணிப்போம்.

Leadership

மாண்புமிகு மக்கள் வழிகாட்டிகள்

வழிகாட்டி / Guide

முனைவர் க.பழனித்துரை M.A., Ph.D.,
மேனாள் பேராசிரியர்,
காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம்

ஒருங்கிணைப்பாளர்

போ.சவடமுத்து M.A., CAIIB,

மேனாள் வங்கியாளர்

இணைய சேவை மற்றும் தொழில்நுட்பம்

இளவல் பா. சௌபாரத் B.Sc., இணையதள வடிவமைப்பாளர்

நமது இலக்கு.....

மே மாத இறுதிக்குள் நமது தன்னர்வலர்களின் எண்ணிக்கையை நான்கு இலக்கத்தை அடைய முயற்சிப்பது....

ஒவ்வொரு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் , தமது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும், வட்டார அளவிலும் குறைந்தது ஒரு தன்னார்வலரை நமது இயக்கத்திற்கு அறிமுகப்படுத்துவது...

இணைய தளத்தில் உள்ள ஒவ்வொரு ஆவணத்தைப்பற்றிய முழு விபரங்களையும், பொதுநலன் சார்ந்த மனுக்களை சமர்ப்பிப்பது குறித்தும் முழுமையான புரிதலை பெறுவது....

சீரிய இடைவெளியில் நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இணைய வழி கூடுதலில் பங்கேற்பது...

ஆக்கபூர்வமான கருத்துக்களையும், செயல்பாடுகளுக்கான முன்னெடுப்புகளையும் Feed Back மூலம் நமது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது...

விரைவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் நேரடி சந்திப்பின் வாயிலாக ஒருவரை ஒருவர் நேரடியாக சந்திப்பதற்கான வாய்ப்பை உருவாக்குவது...

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு— ஒரு உள்ளம் கனிந்த அழைப்பு

மாண்புமிகு மக்கள் இயக்கம்
Maanbumigu Makkal Movement | maanbumigumakkal.com

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு— ஒரு உள்ளம் கனிந்த அழைப்பு —

அன்பான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு,
வணக்கம்.

நீங்கள் இன்று ஒரு சாதாரண பணியை ஏற்கவில்லை. ஒரு வரலாற்று இயக்கத்தின் முதுகெலும்பாக நிற்கிறீர்கள்.

நாம் ஏன் இங்கே நிற்கிறோம்?

தமிழகத்தில் இன்றும் எத்தனையோ மாண்புமிகு குடியரசர்களாகிய நாம் , நமது வரிப்பணத்தில் ஊதியம் பெறும், அரசு பணியாளர்களிடம் அரசமைப்பு சாசனம் வழங்கியுள்ள நமது உரிமைகளை பெறுவதற்காக அரசு அலுவலகங்களில் தலை குனிந்து நிற்க வேண்டிய அவல நிலை.

➤ பட்டா வேண்டுமா — இடைத்தரகர் இல்லாமல் நடப்பது கடினம் .

➤ சாதி சான்று வேண்டுமா — கையூட்டு இல்லாமல் கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி .

➤ குழந்தை பிறப்புச் சான்று வேண்டுமா — எதையோ எதிர்பார்த்து தேவையற்ற வகையில் கால தாமதப்படுத்துவது.

இவையெல்லாம் அன்றாட நிகழ்வுகள் மட்டுமல்ல , நாமும் இதற்கு பழகிப்போய் விட்டோம்.

இது தவறு. இது மக்களின் மாண்பை மிதிக்கும் செயல்.

ஆனால் நாம் இதை மாற்றலாம். மாற்றுவோம். அதற்காகவே மாண்புமிகு மக்கள் இயக்கம் உங்களுக்கு வழிகாட்டுகிறது.


நமது இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குறித்த பெயர் , தொடர்பு எண் ஆகிய விபரங்கள் https://maanbumigumakkal.com/about-us என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மாவட்டத்தில் ஒரு விளக்கு (Torch Light). ஆனால் ஒரே ஒரு விளக்கால் இருளைப் போக்க முடியாது.

தாலுகா தோறும் ஒரு விளக்கேற்ற வேண்டும். அந்த விளக்குகளில் இருந்து கிராம அளவில் ஒளி பரவ வேண்டும்.

அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் — சரியான மனிதர்களை தாலுகா தோறும் அடையாளம் காணுங்கள்.

இதற்கான தரவுகளை ஏற்கனவே மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் தங்களுக்கு பகிர்ந்துள்ளனர் ..

பதவிக்காக அல்ல, பணத்திற்காக அல்ல — பொது நலனில் மனசாட்சியுள்ள ஒருவரை தேடுங்கள்.

➤ அவர் ஒரு ஆசிரியராக இருக்கலாம்.
➤ ஒரு
விவசாயியாக இருக்கலாம்.
➤ ஒரு இளைஞனாக இருக்கலாம்.
ஆனால் அவரிடம் இருக்க வேண்டியது ஒரே ஒரு குணம் — மக்களுக்கான அக்கறை. தாலுகா ஒருங்கிணைப்பாளர்களை உருவாக்குவதே நமக்கு முன்பாக உள்ள தற்போதைய தலையாய பணி.

சமூக தணிக்கை — இது ஒரு போராட்டம் அல்ல, இது ஒரு பொறுப்பு.

நாம் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. அரசு அலுவலகங்கள் மக்களுக்காக சேவை செய்ய உருவாக்கப்பட்டவை.

அரசு ஆணைகள் மக்களுக்காகவே எழுதப்பட்டவை. அவை காகிதத்தில் மட்டுமே உறங்காமல் ., உண்மையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று உறுதி செய்வதே சமூக தணிக்கை.

➤ நமது நோக்கம் அவர்கள் மீது குற்றம் சாட்டுவது அல்ல — அவர்களது கடமையை நினைவூட்டுகிறோம்.

➤ நமது செயல் அவர்களை பகைவர்களாக நோக்குவது அல்ல — அவர்களை பங்காளர்களாக இணைப்பதற்கான முயற்சி.

➤ நாம் குடியரசர்கள் என்ற அதிகாரத்தை காட்டவில்லை — நாம் நேர்மையை நிலைநிறுத்துவதற்கு முயல்கிறோம்.



குழுவாக இயங்குவதே நம் பலம்

தனி மரம் தோப்பாகாது. நம் இயக்கம் ஒரு தனி மனிதனின் புகழுக்காக இல்லை. இது மக்களால், மக்களுக்காக, மக்களுடன் நடைபெறுகிறது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளராகிய நீங்கள் —
➤ உங்கள் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகா ஒருங்கிணைப்பாளருக்கும் வழிகாட்டுங்கள்.
➤ அந்த தாலுகா ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் விழிப்புணர்வுள்ள குடியரசர்களை தன்னார்வலராக மாற்றுவார்.
➤ அந்த கிராமத்தில் உள்ள தன்னார்வலர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஒவ்வொரு அரசு பணியாளரையும் பொறுப்புடன் செயல்பட வைப்பார்.
➤இந்த கூட்டு முயற்சி ஒரு பொறுப்புள்ள மக்களாட்சியை உறுதிசெய்யும்..

இப்படி ஒரு மாற்றத்தின் சங்கிலி உருவாகும்.
✨ நினைவில் வையுங்கள்
"பதவியில் இருப்பவர் 5 ஆண்டுகளுக்குத் தான் மாண்புமிகு... ஆனால், கடமையைச் சரியாகச் செய்யும் குடிமகன் வாழ்நாள் முழுவதும் மாண்புமிகு!"

நீங்கள் இன்று ஏற்றுக்கொண்டுள்ள இந்த பொறுப்பு, எந்த அரசியல் கட்சியாலும் உங்களுக்கு வழங்க இயலாது. உங்களின் செயல்பாடுகளால் உங்களுக்கு கிடைக்கவுள்ள நிரந்தர மாண்புமிகு என்ற மரியாதையை உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க இயலாது.

நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் ஆயிரம் குடிமக்களின் வாழ்வை சீர்படுத்தும்.
உங்கள் ஒவ்வொரு தன்னார்வலர் தேர்வும் மாண்புமிகு குடியரசர்கள் நிறைந்த ஒரு சிறந்த மக்களாட்சியை கட்டமைப்பதற்கான விதை.
வாருங்கள், கரம் கோர்ப்போம். மாற்றத்தை உருவாக்குவோம்.

அன்புடன், maanbumigumakkal.com
மாண்புமிகு மக்கள் இயக்கம் support@maanbumigumakkal.com

🏆 Team

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

தமிழகம் முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தும் நமது வீரர்கள்

0 ஒருங்கிணைப்பாளர்கள்
0 மாவட்டங்கள்
🌟 சமூக சேவை
# பெயர் / Name மாவட்டம் / District தன்னார்வலர் எண் / Volunteer ID தொலைபேசி / Phone
1
திரு. சூர்யபிரகாஷ்
திருப்பூர் மாவட்டம் TN-2026-0063 9954433808
2
திரு. சதீஷ்
புதுக்கோட்டை மாவட்டம் TN-2026-0031 7305054785
3
திரு. சுப்பிரமணியன் C.N
Coimbatore TN-2026-0032 9344720456
4
திரு. வேலு
திருவண்ணாமலை மாவட்டம் TN-2026-0008 9025184372
5
திரு. ரமேஷ்
கரூர் மாவட்டம் TN-2026-0048 9159555955
6
திரு. M.A சொக்கலிங்கம்
தூத்துக்குடி மாவட்டம் TN-2026-0057 9629567024
7
திரு. சு தங்கவேல்
ஈரோடு மாவட்டம் TN-2026-0119 9842723287
8
திரு. ஹபீப் ராஜா
திண்டுக்கல் மாவட்டம் TN-2026-0005 9865609448
9
திரு. சித்திக்
சென்னை மாவட்டம் TN-2026-0153 9940657985
10
திரு. வெங்கடேசன்
விழுப்புரம் மாவட்டம் TN-2026-0009 9750230562
11
திரு.அமரன்
Chengalpattu MMM-TN-2026-0269 9994671219
12
திரு. மார்க்கோஸ் அசோக்
தேனி MMM-TN-2026-0171 7358834741
13
முனைவர்.கந்தவேல்
காஞ்சிபுரம் MMM-TN-2026-0025 9789680254
14
திரு. சரவணன்
அரியலூர் MMM-TN-2026-0216 9092365308
15
திரு. பிரபாகரன்
கடலூர் MMM-TN-2026-0146 9944336219
16
திரு. தங்கேசன்
தர்மபுரி MMM-TN-2026-0184 8124364384
17
திரு. லிமன்கார்த்திக்
கள்ளக்குறிச்சி MMM-TN-2026-0050 8056555532
18
திரு. அருள் சோபி
கன்னியாகுமரி MMM-TN-2026-0125 9600198322
19
திரு. சந்திரசேகரன்
மதுரை MMM-TN-2026-0164 9381242930
20
திரு. கங்காதரன்
மயிலாடுதுறை MMM-TN-2026-0136 7358552838
21
திரு. செந்தில் கிருஷ்ணன்
Nagapattinam MMM-TN-2026-0140 9003971364
22
திரு. சுப்பிரமணியன்
நாமக்கல் MMM-TN-2026-0233 9597403888
23
திரு. சரவணன்
நீலகிரி MMM-TN-2026-0038 9092927198
24
திரு. மணிகண்டன்
பெரம்பலூர் MMM-TN-2026-0147 9443927305
25
திரு. மகாலிங்கம்
ராமநாதபுரம் MMM-TN-2026-0137 9894927020
26
திரு. பாலகுரு
ரானிப்பேட்டை MMM-TN-2026-0139 8610239736
27
திரு. கலையரசு
சிவகங்கை MMM-TN-2026-0017 6379844419
28
திரு. குமாரசாமி பட்டங்கட்டியார்.
தென்காசி MMM-TN-2026-0060 8870754535
29
திரு. ரமேஷ்
தஞ்சாவூர் MMM-TN-2026-0145 9500644103
30
திரு. வில்சன் அருள்நாதன்
திருச்சிராப்பள்ளி MMM-TN-2026-0037 9952891979
31
திரு . பகவதி குமார்
Tirunelveli MMM-TN-2026-0210 9442010043
32
திரு ரூமண்சார்
திருப்பத்தூர் MMM-TN-2026-0030 8072435322
33
திரு வினோத்குமார்
திருவள்ளூர் MMM-TN-2026-0230 9944334440
34
திரு. ராஜேஷ்
திருவாரூர் MMM-TN-2026-0150 7010023392
35
திரு. சிவக்குமார்
வேலூர் MMM-TN-2026-0167 9787263387
36
திரு. ராதாகிருஷ்ணன்
விருதுநகர் MMM-TN-2026-0220 8610605668
37
திரு. சண்முக சந்திர வேலவன்
சேலம் MMM-TN-2026-0064 8489698260
38
திரு. இராஜ்குமார் exMP GS RTI COACH
Krishnagiri MMM-TN-2026-0268 8667418975

தேடல் முடிவுகள் இல்லை