சட்டத்தை மதிக்க வேண்டிய காவல்துறை , சட்டத்தை மிதிக்கிறது....
தமிழக DGPயின் உத்தரவை மதிக்காத DIG,SP,DSP மற்றும் காவல்நிலையங்கள்..தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு கிடைத்த பதில் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது..
அரசால் அங்கீகரிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என தமிழக காவல் துறை தலைவர் DGP அவர்கள் , 3.6.2016 அன்றே C.No. D-X/4063/BCRB /2016 என்ற கடிதத்தின் வாயிலாக அனைத்து IG, DIG, SP, DSP, மற்றும் காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசின் ரகசிய தரவுகள் கசிவதை தடுக்கும் பொருட்டும், நேர்மையான , பொறுப்புணர்வுடன் கூடிய ஒரு காவல் துறையின் செயல்பாட்டை உறுதிசெயயும்பொருட்டு பிறப்பித்த இந்த உத்தரவு பத்து வருடங்கள் கழித்தும் கீழ்மட்ட காவல் அதிகாரிகளால் கடைபிடிக்கப்படுவது இல்லை. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதோ திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் பயன்பாட்டில் உள்ள தனியார் மின்னஞ்சல் முகவரிகள். இவையனைத்தும் பொதுமக்களின் பார்வையில் படாதபடி அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்த தனியார் மின்னஞ்சல்களை பயன்படுத்துவதன்மூலம் இந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து காவல் நிலையங்களும் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.