ஐயா பொறுமை காக்கவும். வழக்கு தொடருவது எளிதல்ல . அதற்கான நிதி? வழக்கறிஞ்சர்களுக்கு பெரும் தொகை நாம் கொடுத்தாக வேண்டும். நமது செயல்பாடுகளை செம்மைப்படுத்தி தகவல் ஆணையர்களை சட்டப்படி செயல்பட வைக்க முயற்சி செய்வோம். இயலாத பட்சத்தில் , நாமாகவே (Party in person) வழக்கு தொடுப்பதற்கான ஆயத்த பயிற்சியை நமது தன்னார்வலர்களுக்கு வழங்க முயற்சி செய்து வருகிறோம். இப்போதைக்கு நமது பணி , மாநிலம் முழுவதும் உள்ள தான்னார்வலர்களை நம்முடன் இணைத்துக்கொள்ள முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வோம்.