செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/xwy-dbpn-cho இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் --> இது தேர்தல் நேரம். ஒரே இடத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், மாண்புமிகு மக்கள் சார்பாக அரசியல் கட்சிகளின் முன்பாக நாம் எழுப்பும் கேள்விகளும் அவர்களது பதில்களும் விரைவில் நமது இனைய தளத்தில் நீங்கள் காணலாம்..   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 322     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 322
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு
Back to Feedbacks
Question

காவிரி குடிநீர் வசதி

எங்கள் ஊரில் சுமார் 300 குடும்பங்கள் உள்ளன.குடிப்பதற்கு குடநீர் இல்லை உப்புத்தண்ணீரைத்தான் குடித்து வருகிறோம் காவிரி குடிநீர் வேண்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29/12/2025 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தேன்.அந்த மனுவை நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கபட்டனர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து பைப்லைன் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது என்று பதில் அனுப்பி உள்ளனர் ஆனால் இதுவரை எந்த தடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை இது எனக்கு ஐந்தாவது மனு இதற்கு முன் நான்கு மனுவுக்கும் இதே பதில் தான் இதற்கு தீர்வு கிடைக்க வேரு வழிகள் இருந்தால் சொல்லுங்கள்
1 Replies

Replies (1)

S
Savadamuthu 18 Apr 2026, 02:58 PM
வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஒரு தகவல் அறியும் உரிமை சட்ட மனுவை தாக்கல் செய்யுங்கள். அதில் இந்த நான்கு பதில் கடிதங்களில் கையொப்பமிட்ட அரசு பணியாலாரின் பெயர், பதவி, தொடர்பு எண் ஆக்கியவை உட்பட, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கை விபரங்களை தகவலாக கோரவும். கிடைத்த தகவல் அடிப்படையில் தவறான தகவலை கொடுத்து உங்களது குறைகளைவு மனு முற்றாக்கம் செய்யப்பட்டிருந்தால் உயர் அதிகாரிகளிடம் அவர் மீது புகார் அளிக்கவும்...

You must login to reply.