செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/xwy-dbpn-cho இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் --> இது தேர்தல் நேரம். ஒரே இடத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், மாண்புமிகு மக்கள் சார்பாக அரசியல் கட்சிகளின் முன்பாக நாம் எழுப்பும் கேள்விகளும் அவர்களது பதில்களும் விரைவில் நமது இனைய தளத்தில் நீங்கள் காணலாம்..   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 322     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 322
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு
Back to Feedbacks
Question

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நியமத்தல் சம்பந்தமாக

ஐயா வணக்கம் எனது பெயர் நடராஜன் முத்துசாமி, நாமக்கல் மாவட்டம், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாண்புமிகு மக்கள் வாட்ஸ் அப் குரூப்பில், மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமித்துள்ளதாக பதிவு போட்டு உள்ளீர்கள், இந்தப் பதவிகளை எதன் அடிப்படையில் நியமித்து உள்ளீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ஐயா.TN-2026-0015
1 Replies

Replies (1)

S
Savadamuthu 17 Apr 2026, 05:03 AM
ஐயா நியமனம் செய்துள்ளோம் என்பதைவிட பொறுப்பு எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்று கூறுவது சரியாக இருக்கும் என நம்புகிறேன். இது பதவி அல்ல. பொறுப்பு. அவர்கள் விரும்பும்வரை அந்த பணியை செய்யலாம். மேலும் இப்பொறுப்பு என்பது அவர்களது செயல்பாடுகளை பொறுத்து மாற்றத்திற்குரியது. முதலில், நமது இணையத்தில் உள்ள அனைத்து பொருண்மைகளையும் அவர்கள் நன்கு அறிந்திருக்கவேண்டும். இணைய வழியாக மின்னஞ்சல் மற்றும் குறைகளைவு மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுக்களை சமர்ப்பிக்க தங்களை தயார் படுத்திக்கொள்ளவேண்டும். தங்களது மாவட்டத்திற்கு கீழ் வரும் வட்ட அளவில் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கவேண்டும். அவர்களுக்கு தேவையான இணைய வழி சேவைகளுக்கு போதிய வழிகாட்டுதல்களை இவர்கள் வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டதன் பேரில் இந்த பொறுப்பு அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.தற்பொழுது தாலுகா அளவில் ஒருங்கிணைப்பாளர்களை இந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கண்டறிந்து வருகின்றனர். விரைவில் வட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் பெயர்களும் பதிவேற்றம் செய்யப்படும்.

You must login to reply.